Google

அவன்தான் அறியாமையில் இருக்கிறான் - J.Krishnamurthi



அறியாமை என்றால் படிக்காத என்ற பொருளில் அல்ல. மாறாக, தன்னைத்தானே யார் அறியவில்லையோ அவன்தான் அறியாமையில் இருக்கிறான். தன்னுள் மன ரீதியான செயல்பாடு அனைத்தின் மேல் விழிப்புக்கொள்வதின் மூலமே ஒருவன் புரிந்துகொள்கிறான். எனவே கல்வி என்பதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் அது தன்னைதானே உணர்தலே.....

கல்வி என்பது வெறும் விஷய  அறிவுகளை சேர்த்துக் கொள்வது அல்ல. கல்வி என்பது வாழ்க்கையின் உட்பொருளை முழுமையாக காண்பதாகும். ஆனால் முழுமையை பகுதி பகுதியாக அணுகக் கூடாது. அரசாங்கங்களும், மத நிறுவனங்களும், ஆட்சியாதிக்கக் கொள்கையுடைய கட்சிகளும் வாழ்க்கையை பகுதி பகுதியாகவே அணுக முயற்சிகள் எடுக்கின்றன.

ஜே கிருஷ்ணமூர்த்தி.
Education and  Significance of Life.       

Comments