Google

இரவுப் பொழுதுக்கான தியானம் - OSHO



விழிப்புணர்வு இல்லாமல் தூங்க செல்லுகையில் நீங்கள் கடைசியாக எதை நினைத்து தூங்க ஆரம்பிக்கின்றீர்களோ, அந்த எண்ணம் தான் தூங்கி எழுந்ததும் முதலில் தோன்றும்.

ஆகவே தூங்குவயற்கு முன் விழிப்புணர்வில் இரவு தியானம் செய்யுங்கள்.
--------------------------------------------------
ஓஷோ கூறும் இரவுப் பொழுதுக்கான தியானம்....

படுக்கையில் படுத்துக் கொண்டு உங்கள் உடம்பை அசதி தீர தளர்த்திக் கொள்ளுங்கள்.

எலும்புகளனைத்தும் தளரட்டும்.

கண்களை மூடிக் கொண்டு உங்கள் உடம்பு இப்போது ஆசுவாசமாகின்றது என்று நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.

படிப்படியாக உடம்பு சாந்தமாகும்.

பிறகு இரண்டு நிமிடங்களுக்கு, உங்களுடைய சுவாசம் அமைதியாகின்றது என்றும், அது சாந்தக்கட்டுக்குள் வருகிறது என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

இறுதியாக இரண்டு நிமிடங்களுக்கு உங்களுடைய சிந்தனைகள் நிறுத்ததுக்கு வந்து விட்டன என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இங்ஙனம் உங்களுக்கு நீங்களே ஒரு தீர்மானமாய் ஆலோசித்துக் கொள்வது, முழு ஆசுவாசத்தையும், ஆழ்நிலை அமைதியையும், வெற்றிட அனுபவத்தையும் கைகூட வைக்கும்.

புத்தி சுத்தமாய் சாந்தமானதும், உங்களுடைய 'சுயம்' நிறைந்துள்ள ஆழ்மன வெளியில் விழித்தெழுங்கள். அங்கு நிலவும் கருணைமயமான சாந்தத்துக்குச் சாட்சியாய் நில்லுங்கள்.

இந்த நிலைப்பாடு, உங்களை ஆன்மா நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும்.
------------------------------------------------
இரவு தியானத்துடன் ஆழ்ந்த தூங்கத்தில் நீங்கள் செல்லுகிறீர்கள்.

காலை விழித்தவுடன் நீங்கள் இயல்பான விழிப்புணர்வில் இருப்பதை உணருவீர்கள்.

தியானத்துடன் தூங்க செல்வோம்.

OSHO_Tamil

Comments