Skip to main content

Posts

Featured

மௌனத்திற்கும் பேரானந்தத்திற்கும் இடையே உள்ள உறவைப் பற்றி நீங்கள் பேசுவீர்களா?

  கேள்வி: பிரிய ஓஷோ ! மௌனத்திற்கும் பேரானந்தத்திற்கும் இடையே உள்ள உறவைப் பற்றி நீங்கள் பேசுவீர்களா? மௌனம் மட்டுமே போதுமானதா? மற்ற அனைத்தும் அதைத் தொடர்ந்து வந்துவிடுமா? ஓஷோ... 🌸 பிரேம் சமர்பண் ! மௌனத்திற்கும், பேரானந்தத்திற்கும்  எந்த உறவும் இல்லை. அவை ஒரே விஷயத்தின் இரண்டு பெயர்கள். 🌸 மௌனமே பேரானந்தம். இது அகராதிப் பொருளல்ல. இது உண்மை நடப்பு அனுபவம். அனுபவத்தில் இது, வேறு வேறு மனிதர்களுக்கு  இது வேறு வேறாக இருப்பதில்லை. 🌸 நீ மௌனமாக மாறினால்... உன்னால் கவலைப்பட முடியாது. உன்னால் இறுக்கமாக முடியாது. உன்னால் துயரப்பட முடியாது. நீ சத்தம் போடவும் முடியாது. உன்னால் தொடர்ந்து படபடக்கவும் முடியாது. இல்லாவிட்டால், எப்படி நீ மௌனத்தில் இருக்க முடியும்? 🌸 இந்த அனைத்து முட்டாள்தனமான வேலைகளும் போய்விட்டால்... "பேரானந்த நிலையைக் கண்டுணரத் தேவையான இடத்தை... மௌனம் சுத்தம் செய்து வைக்கிறது." இவை கிட்டத்தட்ட ஒரே விஷயங்கள். ஏனெனில்,  அவை ஒரே சமயத்தில் நடக்கின்றன. 🌸 "நீ மௌனமானால்... ஒரு குறிப்பிட்ட இனிமை, ஒரு இனிய மணம், ஒரு இனிய எழில், இயல்பாகவே உனக்குள் தானாக எழும்." 🌸 ஆனால், உன

Google

Latest Posts

பிரார்த்தனை பற்றி...

முல்லா நசுரூதீன் கிராமத்துப்பக்கம் காரை ஓட்டிக் கொண்டு போனபோது

கிறிஸ்துவம், இந்து, முகமதியர், சமணம், பௌத்தம் என வெவ்வேறு பெயர்களில் அபின் உள்ளது.

மௌனம், என்கிற ஒரே மொழியை மட்டுமே கடவுள் புரிந்து கொள்கிறார்.

என்னுடை செக்ஸ் ஆசையை என்ன செய்வது....???

நீங்களே வாழ்ந்து பார்க்க வேண்டும்.

எந்த முயற்சியும் வீணாகி விடும் என்று நினைக்காதீர்கள்.

உண்மை அதற்கு நிருபணம் தேவையில்லை

மக்கள் எல்லோருக்கும் சுதந்திரம் தேவையில்லை

உன் துன்பங்கள் மறையும், உன் கவலைகள் தீரும்