Google

பிரார்த்தனை என்பது கடவுளிடம் ஏதோ சொல்வது அல்ல - OSHO



ஓஷோ துளிகள்:
பிரார்த்தனை என்பது கடவுளிடம் ஏதோ சொல்வது அல்ல,
மாறாக அது கடவுள் சொல்வதை கேட்பது.

கருணைக்குப் பின் நன்றியுணர்வு பொங்கி வந்தால்
அப்போது இந்த பிரபஞ்சம் முழுமையுமே ஒரு கோவிலாகி விடும்.

இணைப்புணர்வு என்பது உன்னுள் வளர்வது. அது உன்மேல்
திணிக்கப்படுவது அல்ல. அது ஒரு பிளாஸ்டிக் பூவல்ல. இணைப்புணர்வு என்பது
வாழ்வின் மிகவும் அரிதான கலையுணர்வு அனுபவம்.

உனக்கு வழி காட்டும் புனிதநூல் உன்னால் மட்டுமே
எழுதப்பட முடியும், அது உன்னுடைய அனுபவங்களைக் கொண்டுதான் எழுதப்பட வேண்டும்.

சுயஉணர்வின்றி இருக்கும்போது நீ ஒரு மிருகம்.  சுயஉணர்வுடன் இருக்கும்போது நீ மிருகமாக இருப்பதில்லை. தன்னுணர்வு கொள்ளும்போதுதான் நீ மனிதன்.

தியானம் உன்னை தயார் படுத்தும், கருணை உன்னை
சீர்படுத்தும். ஆகவே இந்த இரண்டு மந்திரங்களையும் உன்னுடன் எப்போதும் எடுத்து செல்.
தியானம் மற்றும் கருணை.
- OSHO_Tamil

Comments