Google

காமத்திலிருந்து ...கடவுளுக்கு - ஓஷோ

************#ஓஷோ#**********



*******#காமத்திலிருந்து ...கடவுளுக்கு#*****  
...........செக்ஸ்தான் மனிதனின் மிகவும் துடிப்புள்ள சக்தி . ஆனால் அந்த சக்தி அப்படியே அழிந்து போய்விடக் கூடாது . செக்ஸ் மனிதனை அவனது ஆன்மாவை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் . அவனது இலட்சியம் காமத்திலிருந்து ஒளியை நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும்.....
#பிரம்மச்சரியத்தை அடைவதற்கு காமத்தைப் பற்றி புரிந்து கொள்ளுதல் அவசியம் . செக்ஸைப் பற்றி அறிந்து கொள்வதுதான் அதிலிருந்து விடுபட , அதைத் தாண்டிச் செல்ல வழி செய்யும் . ஆனால் தனது வாழ்நாள் முழுவதும் செக்ஸை அனுபவித்தும் ஒரு மனிதன் உடலுறவானது தனக்கு சமாதி நிலையின் அனுபவத்தை , தனது உள்ளுணர்வின் சிகரத்தை கொடுக்கிறது என்று கண்டு கொள்ள முடியாமல் இருக்கிறான் . அதுதான் செக்ஸின் மாபெரும் இழப்பு சக்தி ஆகும் . அதுதான் செக்ஸின் வசீகரத்திற்கு காரணம் . அதுதான் எல்லாவற்றிற்கும் மேலான ஒன்றின் காந்தக் கவர்ச்சிக்குக் காரணம் . நீங்கள் அந்தக்கண நேர சமாதி நிலை அனுபவத்தை அறிந்து அதைத் தியானம் செய்ய வேண்டும் . நீங்கள் அதன் மீது உங்கள் விழிப்புணர்வை குவிக்க வேண்டும் . ஒவ்வொருவரிடமும் அதன் ஈர்ப்புவிசை மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது .
செக்ஸைத் தவிர சமாதி நிலையை அனுபவிப்பதற்கு வேறு எளிய வழிகளும் உள்ளன . தியானம் , யோகா , பக்தி ஆகியவை மாற்று வழிகள் . ஆனால் காமத்தின் இந்த வழிதான் மனிதனின் மீது அதிக சக்தி வாய்ந்த வசீகரச் சக்தியுடையதாக உள்ளது . ஒரே லட்சியத்தை அடைவதற்குண்டான பல வழிகளைப் பற்றி அலசி ஆராய்வது மிகவும் முக்கியமானது .
ஒரு நண்பர் எனது பேச்சு அவரை தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளி விட்டதாக எழுதியுள்ளார் . ஒரு தாய் தனது மகளுடன் இங்கு உட்கார்ந்திருந்தால் அவளது நிலைமையும் , ஒரு தாய் தனது மகனுடன் எனது பேச்சைக் கேட்பதற்கு வந்திருந்தால் அவர்களது நிலையை கற்பனை பண்ணிப் பார்க்கும்படி என்னைக் கேட்டுள்ளார் . மேலும் எல்லோர் முன்னிலையிலும் இதுபோன்ற விஷயங்களை விவாதிக்க கூடாது என்றும் எனக்கு அறிவுரை கூறியுள்ளார் .
அவரது மறுப்புக்கள் எல்லாம் ஆதாரமற்றவை என்றும் அவர் அந்த மனநிலையை விட்டு வெளிவர வேண்டும் என்றும் நான் அவருக்கு பதிலளித்தேன் . ஒரு தாய் அறிவுள்ளவளாக இருந்தால் அவள் தனது செக்ஸ் அனுபவங்களை தக்க சமயத்தில் தனது மகளுக்கு விளக்க வேண்டும் . மகள் செக்ஸ் என்னும் பாதாளத்தில் விழுவதற்கு முன் , அவள் அறியாத அந்த ஒன்றில் பக்குவமற்ற வழிகளில் தன்னை இழப்பதற்கு முன்னால் , தாய் அவளுக்கு விளக்க வேண்டும் . ஒரு தந்தை பொறுப்புள்ள பெற்றோராக தனது கடமையைச் செய்ய நினைத்தால் அவர் தனது மகன் மற்றும் மற்றும் மகளுடன் அந்த விஷயத்தைப் பற்றி சுதந்திரமாக விவாதிக்க வேண்டும் . அவர்களை சாதாரணமாக ஏற்படுகின்ற தவறுகளில் இருந்தும் , எதிர் காலத்தில் அவர்கள் நெறி தவறி செல்வதிலிருந்தும் அவர்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் .
ஆனால் இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் அந்தத் தாயோ அல்லது தந்தையோ கூட இந்த விஷயத்தைப் பற்றி ஆழ்ந்த அறிவுப்பூர்வமான அனுபவம் பெற்றதில்லை என்பதுதான் . அவர்களே இன்னும் உடலளவிலான செக்ஸிற்கு மேல் எழுந்து செல்லவில்லை . எனவேதான் அவர்கள் தங்கள் பிள்ளைகளும் அதே மட்டத்தில் மாட்டிக் கொள்வார்களோ என்று அஞ்சுகின்றனர் . ஆனால் நான் உங்களிடம் கேட்கிறேன் . யாராவது உங்களுக்கு வழி காட்டினார்களா ? நீங்களாகவேதான் மாட்டிக் கொண்டீர்கள் . அதே போல் உங்களது குழந்தைகளும் கண்டிப்பாக அவர்களாகவே மாட்டிக் கொள்வார்கள் . இதே கதை இரண்டு , மூன்று தலைமுறைகளாகவும் அதற்கு மேலும் தொடரும் . ஆனால் உங்கள் பிள்ளைகளிடம் இதைப் பற்றி பேசி , அவர்களுக்கு இதைக் கற்பித்து , அவர்களாகவே சுதந்திரமாக இதைப் பற்றி சிந்திக்க அனுமதித்து , அவர்களை தங்களின் சக்திகளை இழப்பதிலிருந்து ஏன் காப்பாற்றக் கூடாது ? அவர்கள் தங்களது சக்தியை சேமித்து வைக்க முடியும் . அவர்கள் அதை மாற்றியமைக்க முடியும் ..............தொடரும் ............

Comments

  1. I want this book in Tamil (kamathil irunthu kadavooluku), please help me to get, I am searching so many ways ,but I can't

    ReplyDelete

Post a Comment