Google

ஞானம் என்றால் என்ன? ஞானத்தை எப்படி விளக்குவது?- பகவத் ஐயா



ஞானம் என்றால் என்ன? ஞானத்தை எப்படி விளக்குவது? பகவத் ஐயாவின் 
விளக்கம் பின்வருமாறு:
-------------------------------------------
.
ஞானம் என்பது ... ஒரு பிரமாண்டமான அனுபவம் அல்ல. ஞானம் என்பது ஒரு எளிய அறிவு ப்பூர்வமான புரிதல் மட்டுமே.
.
ஞானம் பெறுவதற்கு பயிற்சியும் தேவை இல்லை, முயற்சியும் தேவை இல்லை. ஒரு நொடிபொழுது போதும் இதனை புரிந்து கொள்வதற்கு.
.
ஞானம் என்பது ... நம் அறிவு தன் எல்லையை புரிந்து கொள்ளுவது …. நம் அறிவு ... தனக்கு எங்கே வேலை இருக்கிறது... தனக்கு எங்கே வேலை இல்லை என்று புரிந்து கொள்ளுவது தான் ஞானம்.
.
நாம் நமது மனோ இயக்கம் சம்பந்தமாக, நாமாகச் செயல்படுவதற்கு எதுவும் இல்லை என்பதைக் கண்டுகொள்வதே 'ஞானம்'.
.
நம்முடைய மன உணர்வுகளைச் சீரமைக்கும் வல்லமை நமக்கு கிடையாது என்ற நமது இயலாமையை  நாம்  அறிவுப்பூர்வமாகப்  புரிந்துக் கொள்வதுதான்  'ஞானம்'.
.
நம் அறிவு புறச்செயல்களை நிர்வாகம் செய்யலாம். மனதையும் நிர்வாகம் செய்ய முயலுவது தான் நம் எல்லா மன பிரச்சனைகளுக்கும் காரணம். நம் அறிவு நம் மனதை நிர்வாகம் செய்ய முடியாது என்று புரிந்து கொள்வது தான் … ‘ஞானம்’.
.
மனதில் எண்ணங்கள் ...  அதன் போக்கில் தான் வரும்... அவை நம் அறிவின் கட்டுபாட்டுக்குள் இல்லை என்று புரிந்து கொள்வது தான் … ‘ஞானம்’.
.
நாம் தூங்குவதற்கு செல்கிறோம் ... எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன..." எண்ணங்களே! நான் தூங்க போகிறேன்.... நாளை வாருங்கள் " என்று சொன்னால் கேட்குமா?...
.
"மனசே, இன்று முழுவதும் மகிழ்ச்சியான எண்ணங்கள் மட்டுமே வர வேண்டும் ... கோபம், துக்க எண்ணங்கள் வர கூடாது" என்று நம் மனதிடம் நம் அறிவு ஒரு கோரிக்கை வைத்தால் … நம் மனது கேட்குமா?
.
நம் மனம் நம் அறிவின் கைகளில் இல்லை என்று அறிவுபூர்வமாக புரிந்து  கொள்வது தான் ‘ஞானம்’.
.
புறத்தில் நடப்பவற்றை  எல்லாம்  பிரதிபலிப்பது நம் மனதின்  இயற்கை. நம் அறிவு முயற்சி செய்து  தான்  விரும்பியதை நம் மனம் பிரதிபலிக்க வேண்டும் என்று ஒவ்வொருகணமும்  போராடுகிறது.
.
இந்த முடிவில்லா போராட்டம், ஒரு வீண்முயற்சி என்று நம் அறிவு புரிந்து கொள்ளும் பொழுது  தன் முயற்சியை முழுமையாக கைவிடுவது தான் ஞானம். இதுவே  அகசரணாகதி. ஞானம் என்பது ஒரு 'அறிவுபூர்வமான புரிதல்' (Intellectual Understanding) மட்டுமே.
.
எல்லாம் அவன் செயல் - நம் மனதில் தோன்றும் இன்ப தும்பங்கள் எல்லாம் அவன் செயல் என்று பக்தி மார்க்கம் போதிக்கும் சரணாகதியும், இந்த அகசரணாகதி தான்.
.
சும்மா இருப்பது என்பது நம் முயற்சியால் வருவதன்று...
முயற்சியை கை விடுவதால் வருவது...
.
இந்த உண்மையை  எவரும் கடை பிடித்து புரிந்து கொள்ள முடியும் ... இது நம் மனதிற்கானது.
.
இந்த 'ஞான புரிதலின்' விளைவு?

ஞானப் புரிதலுக்கு பின் ... நம் மனம் விடுதலையுடன் இயங்க தொடங்கி விடுகிறது.
.
சதா மகிழ்ச்சியையும் நிம்மதியையும், மனதிடம் தேடி கொண்டு இருந்த நம் அறிவு, தேடுதலை நிறுத்தி விடுகிறது. மனதில் ஓடும் உணர்வுகளுடன் போராடி புதுப்பித்துக்கொள்வதை நிறுத்தி விடுகிறது.
.
அறிவின் குறுக்கீடோடு இல்லாத நம் மனம் நின்று விடுவதில்லை ... அது விடுதலையுடன் இயங்க தொடங்கி விடுகிறது.
.
இதுவே விடுதலை ... இதுவே ஆன்மீகத்தில் உயர்வாக கருதப்படும் ... முக்தி ... இதுவே ஞான விடுதலை.
.
இந்த விடுதலை ஒரு அனுபவம் அன்று. எல்லா  அனுபவங்க ளும் சுதந்திரமாக வந்து போவது தான் விடுதலை.
.
ஒரு குழந்தையானது இந்த விடுதலையுடன் தான் இருக்கின்றது. எல்லா ஞானிகளும் இந்த மன விடுதலையுடன் தான் வாழ்கின் றார்கள். !!!!!! - பகவத் ஐயா...

Comments

  1. https://m.facebook.com/story.php?story_fbid=840878699853410&id=100017938626676

    ReplyDelete
  2. https://m.facebook.com/story.php?story_fbid=840878699853410&id=100017938626676

    ReplyDelete

Post a Comment