Google

நட்பு பற்றி ஓஷோ - OSHO



💐💐💐💐நட்பு பற்றி ஓஷோ 💐💐💐

நட்பு என்பது பகிர்தலாக இருக்க வேண்டும்.

 உன்னிடம் ஏதாவது இருந்தால் பகிர்ந்து கொள். யார் உன்னிடம் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்களோ அவர்கள் நண்பர்கள்.


 அது தேவை பற்றி. கேள்வி அல்ல. நீ அபாயத்தில் இருக்கும்போது ஒரு நண்பன் வந்து உதவ வேண்டும் என்ற தேவையேகிடையாது.


அது சம்பந்தமில்லாதது. அவன் வரலாம், வராமலும் இருக்கலாம் ஆனால் அவன் வர வில்லையென்றால் நீ குற்றமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.


அவன் வந்தால் நீ மிகவும் நன்றியோடு இரு, வரவில்லையென்றால் பரவாயில்லை. வருவதும் வராததும் அவனிஷ்டம்.


 நீ அவனை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை, நீ அவனை குற்றம் சொல்லக் கூடாது. உனக்கு கெட்ட எண்ணம் எதுவும் இருக்கக் கூடாது.


எனக்குத் தேவை ஏற்படும் போது நீ ஏன் வரவில்லை என்ன வகையான நண்பன் நீ என்று கேள்வி கேட்கக் கூடாது



நட்பு என்பது சந்தைக்கடைக்குரியது அல்ல. நட்பு என்பது கோவிலுக்குரிய மிக அரிதான விஷயங்களில் ஒன்றாகும், அது கடைவீதிக்குரியது அல்ல. ஆனால் உனக்கு அந்த வகையான நட்பைப் பற்றி எதுவும் தெரியாது. நீ அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.



நட்பு என்பது மிகப் பெரும் கலை. அன்பின் பின்னே ஒரு இயற்கையின் உந்துதல் இருக்கும், நட்பின் பின்னே எந்த இயற்கையின் உந்துதலும் இருக்காது.


நட்பு என்பது தன்னுணர்வு கொண்டது. அன்பு தன்னுணர்வு இல்லாதது.
நாம் அன்பு என்று அழைப்பது மனித உணர்வை விட அதிக விலங்குணர்வு கொண்டது.


நட்பு முழுக்க முழுக்க மனித உணர்வு கொண்டது. உன் உயிரியலிலேயே உள்கட்டமைப்பு கொண்டதல்ல அது. அது உயிரியலை சேர்ந்ததல்ல.


 ஆகவேதான் ஒருவர் நட்பில் உயர்கிறார், அவர் நட்பில் விழுவதில்லை. அது ஆன்மீக பரிமாணம் கொண்டது.💐💐💐💐💐

-OSHO_Tamil

Comments

Post a Comment