Google

ஓஷோ: , ' என்னைப் பின்பற்றுங்கள் , கவலையற்று இருங்கள்.- OSHO



ஓஷோ: , ' என்னைப் பின்பற்றுங்கள் , கவலையற்று இருங்கள்.
நான் உங்களைச் சுமக்கிறேன் ' என்று ஒருசில மதங்கள் கூறுகிறதே, இது சரியா......???
#பதில் : "சுய சிந்தையற்றவர்கள்தான் ஒருவரை ஆட்டு மந்தையைப் போல பின்பற்றுவார்கள்.
புத்திசாலிகள் தங்களுடைய வழிகளைத் தாங்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்.
நீங்கள் என்னோடு இங்கு இருந்தால் அது இரண்டு வழிகளில் இருக்கலாம்.
ஒன்று நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தோடு இருக்கலாம்.
அப்பொழுது என்னிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால், நீங்கள் என்னைப் பின்பற்றமாட்டீர்கள்.
நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தின்படியேதான் செல்லுவீர்கள்.
ஆனால் , நீங்கள் ஒரு முட்டாளாக இருந்தால், நீங்கள் என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுவதைப் பற்றி அக்கறை காட்ட மாட்டீர்கள்.
நீங்கள் என்னை வெறுமனே பின்பற்றுவீர்கள்.
இது மிகவும் எளிதானது.
ஆபத்து குறைந்தது.
அதிக பாதுகாப்பு கொண்டது.
ஏனென்றால் உங்கள் பொறுப்பை எப்பொழுதும் என்மேல் சுலபமாகச் சுமத்திவிடுவீர்கள்.
ஆனால் , இது இறப்புக்குச் சமம்தான் ; வாழ்வுக்கு அல்ல.
வாழ்வு அபாயகரமானதுதான்.
புத்திசாலிகள் ஆபத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.
ஏனென்றால், அங்குதான் உண்மையான வாழ்வு இருக்கிறது.
என்னைப் பின்பற்றுங்கள். என் மடியில் இளைப்பாறுங்கள். கவலையை விடுங்கள் '
என்று சொன்னது ஒரு படிப்பறிவு இல்லாத முட்டாள் கூட்டத்துக்குத் தானே ஒழிய, புத்திசாலிகளுக்கும் , சுயசிந்தனை உள்ளவர்களுக்கும் அல்ல.
ஜீசஸ் போதித்தது படிப்பறிவில்லாத எளிமையான மக்களுக்குத்தான் ; உங்களுக்கு அல்ல......!!!💐

-Osho-Tamil 

Comments