Google

நான் சாதாரணமானவன் - OSHO



🌹 நான்  சாதாரணமானவன்

கேள்வி :

 நீங்கள் , "நான் மிகவும் சாதாரணமானவன் ' என்று கூறுகிறீர்களே இதற்கு என்ன அர்த்தம் ? எங்களுக்குச் சற்று விளக்கவும்

பதில் :

உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை .

 நான் மிகச் சாதாரண நிலையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் நானாகவே இருக்கிறேன் .

உண்மை மிகவும் சாதாரணமானது .

 ரோஜாப்பூ , ரோஜா பூவாகவும் , ஆறு ஆறாகவும் , பாறை பாறையாகவும் இருக்கிறது .

நான் அவற்றைப் போல ஒரு சாதாரணமானவன் .

பிறகு உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ?

அந்த வித்தியாசம் , நான் என்னுடைய சாதாரணத் தன்மையைக் கொண்டாடுகிறேன் .

 ஆனால் நீங்களோ அதைக் கொண்டாடுவது இல்லை .

நான் அதில் நிறைவாக இருக்கிறேன் .

 பேரானந்தத்தில் இருக்கிறேன் .

 நான் ஒரு உயிர்த்தன்மையாக இருக்கிறேன் .

 நீங்களோ எதிர்காலத்தில் இருக்கிறீர்கள்

 என்னிடம் எந்த எதிர்பார்ப்போ , எந்தப் புகாரோ , வேறு யாரையும் போல நான் ஆகவேண்டும் என்று முயன்றதோ இல்லை .

நான் என்னுடைய படைப்பில் நிறைவாக இருக்கிறேன் .

 🌿நான் ஒரு சின்ன விஷயத்தைக்கூட மாற்ற விரும்பியது இல்லை . 💐

இந்தப் பரிபூரண ஓய்வுத்தன்மையில் அந்தத் தெய்வீகக் கொண்டாட்டம் தானே கிளம்புகிறது .

இந்தப் பிரபஞ்ச உயிர்த்தன்மையில் கடவுள் மிகவும் சாதாரணமாக இருக்கிறார் .

அது அப்படித்தான் இருக்கவேண்டும் .

நீங்கள் வித்தியாசமாகவும் , தனித்தன்மையுடையவராகவும் இருக்கும் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் விட்டுவிடுவது தான் என்னுடைய முழுப் போதனையாகும் .

 உண்மையை அப்படியே அனுபவியுங்கள் .

 நீங்கள் யாராக இருந்தாலும் எங்கே இருந்தாலும் நீங்கள் உங்களையே கொண்டாடுங்கள் .

 இதைத்தான் நான் பிரார்த்தனை என்கிறேன் .

நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ , அப்படி இருப்பதே மிகப்பெரிய அற்புதம் ! .....

கேள்வி :

 நாங்கள் உங்களோடு எவ்வளவு காலம் இருக்க வேண்டும் ?

பதில் :

" அது உங்களைப் பொறுத்தது ; என்னைப் பொறுத்தது அல்ல .

 எந்த மாஸ்டரும் , யாரையும் ஞானமடைய வற்புறுத்த முடியாது .

 எந்த மாஸ்டரும் ' என்னோடு இரு ' என்று கட்டளையிட முடியாது .

 ஒரு சீடனின் இதயம்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் .

அந்த அன்புப் பிணைப்பு சீடனின் இதயத்திலிருந்து வரவேண்டும் .

 இது ஒரு கல்லூரி இல்லை .

நீங்களும் ஒரு மாணவர் இல்லை .

 என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் முழு சுதந்திரத்தில் இருக்கிறீர்கள் .

இங்கே யாரும் வரவில்லையென்றாலும் , நான் ஒவ்வொரு நாள் மாலையும் இங்கு வந்து இந்த மூங்கிலுக்குப் பிரசங்கம் பண்ணுவேன் !

நீங்கள் இங்கு இருப்பதா , வேண்டாமா என்பது உங்களுடையது முடிவு ; என்னுடையது அல்ல . " .......... 🌹

♥ ஓஷோ ♥
-OSHO_Tamil

Comments