Google

வாழ்வு ஒருவிதக் குழப்பக் கலக்கமாகும். - OSHO



வாழ்வு ஒருவிதக் குழப்பக் கலக்கமாகும்.

இதில் நிலையாக எதுவும் இருப்பதில்லை.

அப்படியிருந்தும் நாம் முட்டாள்தனமமாக பற்றிக்கொள்வதையே விரும்புகிறோம்.

மாற்றமே வாழ்வின் இயல்பாக இருக்கும் போது, பற்றிக்கொள்வதால் வாழ்வின் இயற்கையான சட்டத்தை மாற்றிவிட முடியாது.

பற்றிக்கொள்வதால் அது உங்களுக்குத்தான் துன்பத்தைத் தரும்.எல்லாமே மாறிக்கொண்டேதான் இருக்கும்;நீங்கள் பற்றிக் கொண்டிருந்தாலும் சரி விட்டுவிட்டாலும் சரி.!

நீங்கள் பிடிவிட மறுக்கிறீர்கள்.ஆனால் நீங்கள் பிடித்திக் கொண்டிருந்தது மாறிவிடுகிறது.

இதனால் உங்கள் மனம் சோர்வடைகிறது. நீங்கள் பற்றிக்கொள்ளாமல் இருக்கும் போதும் அவை மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் நீங்கள் சோர்வடைவதில்லை.

ஏனென்றால் எல்லாமே மாறிக்கொண்டேதான் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இதுதான் வாழ்வின் இயல்நிலை;வாழ்வு உள்ளவிதம் இதுவே.

--ஓஷோ--

Comments