Google

நெறிமுறை பற்றி ஓஷோ கருத்து என்ன? - OSHO



மூலம் : : AH THIS! – CHAPTER # 8
“நெறிமுறை பற்றி ஓஷோ கருத்து என்ன?” : நெறிமுறை பற்றிய 3 கேள்விகளுக்கு ஓஷோ பதில்கள்
.
3. காமத்தைப் பொறுத்தவரை நெறிமுறையின் எதிர்காலம் என்ன?
.
காமத்தைப் பொறுத்தவரை எந்த நெறிமுறைக்கும் எதிர்காலம் இல்லை.உண்மையில் நெறிமுறையையும் காமத்தையும் இணைத்த காரணத்தால் நெறிமுறையின் கடந்த காலம் முழுவதும் விஷமாகிவிட்டது. நெறிமுறை அளவுக்கு அதிகமாக காமத்தை சார்ந்ததாகிவிட்டது. அதனால் அது காமத்தைத்தவிர முக்கியமான மற்ற தனது பரிமாணங்களை எல்லாம் இழந்துவிட்டது. நெறிமுறை சிந்தனைக்கு காமம் பெரிய பொருட்டாக இருக்ககூடாது.
.
உண்மை, நேர்மை, சுயப்பொறுப்புணர்வு, முழுமை, இவைகளைத்தான் நெறிமுறை பொருட்படுத்தவேண்டும்.விழிப்புணர்வு, தியானம், தன்ணுணர்வு, அன்பு இவைகளைத்தான் நெறிமுறை பொருட்படுத்தவேண்டும்.
.
ஆனால் கடந்த காலத்தில் காமமும் நெறிமுறையும் கிட்டதட்ட ஒரே பொருள் தருவதாக மாறிவிட்டன. காமம் அதிக சக்தியுள்ளதாகவும், அடக்கமுடியாததாகவும் மாறிவிட்டது. எனவே யாரையாவது நெறிமுறையற்றவன் என நீ கூறினால் அவனுடைய காம வாழ்க்கையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்றே நீ குறிப்பிடுகிறாய். நீ மிக நெறிமுறையானவன் என யாரைப் பற்றியாவது கூறினால், அவன் வாழும் சமூகத்தில் காமத்தைக் குறித்துப் போடப்பட்டுள்ள சட்டதிட்டங்களின்படி நடந்துகொள்கிறான் என்பதையே நீ குறிப்பிடுகிறாய். நெறிமுறை ஒற்றைப் பரிமாணம் கொண்டதாகிவிட்டது. அது நல்லதல்ல, அந்த நெறிமுறைக்கு எதிர்காலம் இல்லை, அது இறந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அது இறந்துவிட்டது. நீ ஒரு பிணத்தை சுமந்துகொண்டிருக்கிறாய்.
.
கடந்த காலத்தில் இருந்ததைப்போல இறுக்கமான விஷயமாக இல்லாமல் காமம் மேலும் விளையாட்டுத்தன்மை கொண்ட விஷயமாக மாறவேண்டும். அது ஒரு விளையாட்டை விளையாடுவதைப் போல விளையாட்டாக இருக்கவேண்டும். இரண்டு மனிதர்கள் ஒருவர் இன்னொருவரின் உடல் சக்தியோடு விளையாடுகிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்வாக இருந்தால், யாரும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அவர்கள் ஒருவர் மற்றொருவரின் சக்தியில் ஆனந்தம் கொள்கிறார்கள். இரு சக்திகள் இணைந்து ஆடும் ஒரு நடனம் அது. சமூகத்தைப் பொறுத்தவரை அது ஒரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. ஒருவர் மற்றொருவரின் வாழ்வில் குறுக்கிட்டால், ஒருவன் தன்னை மற்றவர் வாழ்வில் கட்டாயபடுத்தி திணித்தால், மற்றவரின் வாழ்வை கெடுத்தால் அப்போது மட்டுமே சமுதாயம் உள்ளே வரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையே இல்லை. அது ஒரு பொருட்டாக இருக்ககூடாது.
.
எதிர்காலம் காமத்தை குறித்து ஒரு முற்றிலும் வேறுபட்ட பார்வையை கொண்டிருக்கும். அது அதிக விளையாட்டாகவும், அதிக மகிழ்ச்சியுடனும், அதிக நட்போடும் கடந்த காலத்தைப் போல் இறுக்கமான விஷயமாக இல்லாமல் விளையாட்டாகவும் இருக்கும். அது மக்களின் வாழ்வை அழித்துள்ளது. தேவையில்லாமல் அவர்களை அதிக சுமை கொண்டவர்களாக ஆக்கியுள்ளது. அது காரணமேயில்லாமல் அளவுக்கதிகமான பொறாமையையும், பிடிப்பையும், ஆளுமையையும், நச்சரித்தலையும், சண்டையிடுதலையும், குறை கூறுதலையும், உருவாக்கியுள்ளது.
.
காமம் உடலைச் சார்ந்த ஒரு சாதாரண விஷயம், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்ககூடாது. அதன் ஒரே முக்கியத்துவம் அந்த சக்தியினை உயர்ந்த தளங்களுக்கு மாற்றமுடியும் என்பதே. அது மேலும் மேலும் ஆன்மீகமாக மாறமுடியும். அதை மேலும் மேலும் ஆன்மீகமாக மாற்றும் வழி அதன் இறுக்கத்தை குறைத்து தளர்த்துவதே.
.
டாக்டர் பைபர்க்கு வந்திருக்கும் நோயாளியுடன் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த பெண்ணை அவர் எல்லா பரிசோதனையும் செய்துவிட்டார் ஆனால் அவரது பரிசோதனையின்
முடிவுகள் ஓரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தன. முடிவில் அவர்
“ பிரச்சனை என்ன என எனக்கு தெளிவாக தெரியவில்லை” என
ஒப்புகொண்டார்.
.
“உனக்கு சளி பிடித்திருக்கிறது அல்லது நீ கர்ப்பமாக இருக்கிறாய்”
என அவர் கூறினார்.
.
அதற்கு அவள்,
“நான் கர்ப்பமாகத்தான் இருக்கவேண்டும், எனக்கு சளியை
கொடுத்திருக்ககூடிய அளவு நெருக்கமாக யாரையும் எனக்கு
தெரியாது” என கூறினாள்.
.
இதுதான் எதிர்காலம்.
.
நன்றி -🌹🌹🌹🌹🌹🌹

Comments