Google

எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல்... - OSHO



எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல்

ஆச்சரியத்துடனேயே
இருப்பது தான் தியானம்

நீ ஆச்சரியமாக இருக்கும் போது உன் மனதில் எண்ணம்

புகுந்தால் நீ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாய்

இந்த உலகம் முழுக்க ஆச்சரியம் நிறைந்து இருக்கிறது

நீ ஆச்சரியத்தில் சாதாரணமாக இருக்க முடியவில்லை

என்பதால் கேள்விகள் கேட்கிறாய்

கேள்விகளுக்கும் பதில்களுக்கும் முடிவே கிடையாது

ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு இட்டுச் செல்லும்

ஒரு பதில் ஆயிரம் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்

ஆச்சரியம் அற்புதத்துக்கு இட்டுச் செல்கிறது

அதற்கு ஓர் ஆன்மீகப் பெயர்தான் கடவுள்

கடவுள் என்பது அறிந்து கொள்ள முடியாத ஓர் அற்புதம்

கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு ஆச்சரியத்தின் மீது கவனம் செலுத்து

வெகு விரைவில் ஆச்சரியம் மறைந்து போய் அற்புதம் தோன்றி விடும்

ஆச்சரியம் என்பது ஒரு சிறு அலை அற்புதம் என்பது பெருங் கடல்

நீ ஆச்சரியத்திலேயே இருக்கும் போது

அது உன்னை அற்புதத்திற்கு இட்டுச் செல்கிறது

அற்புதம் எல்லையற் றதற்கு இட்டுச் செல்கிறது

அது கடவுளுக்கு இட்டுச் செல்கிறது

ஆனால் உடனே சிந்திக்க மட்டும் ஆரம்பித்து விடாதே

உனக்கு ஏதாவது ஆச்சரியம் தோன்று மானால் அதனுட னேயே தங்கி விடு

அப்போது ஆழ்ந்த மௌனம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்

ஒரு நாள் அந்த ஆச்சரியம் அற்புதத்திற்குள் கரைந்து போகும்

அந்த ஆச்சரியத் தோடு நீயும் கரைந்து போவாய்

யோசிக்க ஆசை வரும் உன்னுடைய மனது அந்த

ஆச்சரியத்தை சிந்தனையாக்கி விடும்

அதனால் அந்த யோசிக்கும் ஆசையிலிருந்து விடுபட்டு நில்

நீயும் ஒரு அற்புதமாகி விடுவாய்

ஓஷோ
தாவோ
மூன்று நிதியங்கள் II

Comments