Google

மனிதன் தன் ஆணவத்திற்கு, தீனி போட்டுக் கொண்டே இருக்கிறான்...- OSHO



மனிதன் தன் ஆணவத்திற்கு, தீனி போட்டுக் கொண்டே இருக்கிறான்...

ஆனால்,

இவன் இல்லாமலேயே...
எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது...

🌸இவன் ஒன்றுமே இல்லை...

ஆனால், தானே எல்லாமாக நினைத்துக் கொள்கிறான்...

🌻முல்லா நஸ்ருதீன்,

ஒரு கிணற்றைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்...

உள்ளே எட்டிப் பார்க்கலாம்
என்று தோன்றியது...

அது இரவு நேரம்...
இருந்தாலும் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார்...

கிணற்று நீரில் நிலா தெரிந்தது...

🌻"ஐயோ, இந்த நிலாவைக்
காப்பாற்ற வேண்டுமே!"
என்ற எண்ணம் தோன்றியது அவருக்கு...

காப்பாற்றாவிட்டால் சந்திரன்
தேய்வது எப்படி?
தேயாவிட்டால் ரம்ஜான் நோன்பிருக்க எப்படி முடியும்?

🌻அவர் உடனே ஒரு கயிற்றைத் தேடிப்பிடித்துக் கிணற்றுக்குள் வீசினார்...

🌻"பிடித்துக்கொள், பலமாக!"
என்று கத்தினார்...

கயிறு எங்கோ, கீழே மாட்டிக் கொண்டது...

பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தார் அவர்...

முடியவில்லை.
கயிறு வரவில்லை...

🌻திடீரென்று கயிறு கழன்றது...

தடாலென மல்லாக்கத் தரையில் விழுந்தார் முல்லா...

மூச்சு வாங்கியது...
மேலே பார்த்தார்...

🌸வானத்தில் நிலவின் பவனி!
அவருக்கு ஒரே மகிழ்ச்சி...

"நான் வந்து காப்பாற்றியதால்
உயிர் பிழைத்தாய்!!

இல்லையா? என்றார் முல்லா மகிழ்ச்சியுடன்.

🌸"தன்னால்தான் எல்லாம் நடப்பதாக" மனிதன் நினைத்துக் கொள்கிறான்.

🌸"இவன் பிறக்கும் முன்பும்...
இந்த உலகம் இருந்தது...

இவன் இறந்த பிறகும்...
இந்த உலகம் இருக்கும் !!!"

#ஓஷோ

Comments