Google

மனிதன் தன் ஆணவத்திற்கு, தீனி போட்டுக் கொண்டே இருக்கிறான்...



மனிதன் தன் ஆணவத்திற்கு,
தீனி போட்டுக் கொண்டே இருக்கிறான்...

ஆனால்,

இவன் இல்லாமலேயே...
எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது...

🌸இவன் ஒன்றுமே இல்லை...

ஆனால், நான்தான் எல்லாமே
என நினைத்துக் கொள்கிறான்...

🌻முல்லா நஸ்ருதீன்,

ஒரு கிணற்றைக் கடந்து
போய்க் கொண்டிருந்தார்...

உள்ளே எட்டிப் பார்க்கலாம்
என்று தோன்றியது...

அது இரவு நேரம்... இருந்தாலும்,
கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார்...

கிணற்று நீரில் நிலா தெரிந்தது...

🌻"ஐயோ, உள்ளே விழுந்த
இந்த நிலாவைக் காப்பாற்ற வேண்டுமே!"

என்ற எண்ணம் தோன்றியது அவருக்கு...

காப்பாற்றாவிட்டால் சந்திரன்
தேய்வது எப்படி?

தேயாவிட்டால் ரம்ஜான் நோன்பிருக்க
எப்படி முடியும்?

🌻அவர் உடனே ஒரு கயிற்றைத் தேடிப்பிடித்துக் கிணற்றுக்குள் வீசினார்...

🌻"பிடித்துக்கொள், பலமாக!"
என்று கத்தினார்...

கயிறு எங்கோ, கீழே மாட்டிக் கொண்டது...

பலம் கொண்ட மட்டும்
இழுத்துப் பார்த்தார் அவர்...

முடியவில்லை...
கயிறும் வரவில்லை...

🌻ஆனால், திடீரென்று கயிறு கழன்றது...

தடாலென மல்லாக்கத் தரையில்
விழுந்தார் முல்லா...

மூச்சு வாங்கியது...
மேலே பார்த்தார்...

🌸வானத்தில் நிலவின் பவனி!
அவருக்கு ஒரே மகிழ்ச்சி...

"நான் வந்து காப்பாற்றியதால்
உயிர் பிழைத்தாய்!!

இல்லையா? என்றார் முல்லா மகிழ்ச்சியுடன்.

🌸"தன்னால்தான் எல்லாமே நடப்பதாக"
மனிதன் நினைத்துக் கொள்கிறான்...

🌸"இவன் பிறக்கும் முன்பும்...
இந்த உலகம் இருந்தது...

இவன் இறந்த பிறகும்...
இந்த உலகம் இருக்கும் !!!"

🌿ஓஷோ🌿

Comments