Google

புத்தர் இறக்கும் போது அவருடைய சீடர்கள் அழுது அரற்றிக் கொண்டிருந்தார்கள்.



புத்தர் இறக்கும் போது அவருடைய சீடர்கள் அழுது அரற்றிக் கொண்டிருந்தார்கள். தன் கண்களைத் திறந்து புத்தர் அவர்களிடம் அழுவதை நிறுத்துங்கள் . நான் இதுவரை சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் நீங்கள் சரியாகக் கவனித்து கேட்க வில்லையா , எதற்கு இந்த அழுகை என்றார் .

தலைமைச் சீடரான ஆனந்தா புத்தரிடம் நீங்கள் எங்களை விட்டு போகப் போகிறீர்கள் . எங்களுக்கு என்ன நடக்கப் போகிறதோ ? என்றார் . அதற்கு புத்தர் நான் சொன்னதை நீங்கள் இன்னமும் சரியாக கேட்டு வாங்கிக் கொள்ளவில்லை . என் உபதேசங்களை மட்டும் கேட்டுக் கொண்டிராமல் உங்களுக்கு நீங்களே ஒளியாக இருந்திருந்தீர்களேயானால் உங்களுடைய  ஆன்மாவை உணர்ந்து இருந்தீர்களேயானால் அழுவதற்கு எந்த தேவையும் இருக்காது என்றார் ..

மஞ்சுஶ்ரீ என்ற மற்றொரு சீடரைப் பாருங்கள் . அவர் எப்படி அழாமல் உட்கார்ந்து இருக்க முடிகிறது என்று கேளுங்கள்  என்றார் . மஞ்சுஶ்ரீ கூறினார் .. என்னுடைய ஒளியைத் தெரிந்து கொள்ள புத்தர் உதவினார் .
நானே சாகப் போவதில்லை என்கின்ற போது புத்தர் எப்படி சாக முடியும் ? 

புத்தர் இங்கேதான் இருக்கப் போகிறார் . ஒரு நதி கடலில் கரைந்து விடுவதைப் போல அவர் இந்தப் பிரபஞ்சத்தில் கரைந்து விடப் போகிறார் .
அவர் இந்தப் பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கப் போகிறார் . இதுவரை புத்தர் ஒரு சிறு உடலுக்குள் அடங்கிக் கிடந்தார் . இப்போது அவருடைய மணம் வெளிப்படப் போகிறது . அவர் எங்கெங்கும் பரவியிருக்க போகிறார் என்பது எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் . 

புத்தர் இந்த உடலை விட்டு போகப் போகிறார் என்பது எனக்கு எப்படி தெரியும் என்கின்றீர்களா ? என்னுடைய ஆன்மாவை நான் தெரிந்து வைத்திருப்பதால் எனக்கு தெரிந்திருக்கிறது . அவர் சொன்னதையெல்லாம் நான் கேட்டு வாங்கிக் கொண்டேன் . நீங்கள் எதையும் கவனிக்கக் கூட இல்லை . அதனால்தான் அழுகிறீர்கள் என்றார்.

புத்தர் மீண்டும் பேசினார் . " அப்ப தீபோ பவ " உனக்கு நீயே ஒளியாவாய் .
இப்படி கூறி விட்டு இந்த பிரபஞ்சத்தில் கலந்து போனார் . அவருடைய முதல் வார்த்தைகளே அவருடைய கடைசி வார்த்தைகளாகவும் ஆகி விட்டது ..

இந்த உலகத்திற்கு வந்துள்ள நாம் எல்லோருமே 
உடலாலும் மனதாலும் எல்லைகளுக்கு உட்பட்டு கட்டுண்டு கிடக்கிறோம் .
உங்கள் உயிர்த்தன்மையும் உடலில் சிக்கி மாட்டித்
தவிக்கிறது ...

எப்போது இந்த உடலில் இருந்தும் மனதில் இருந்தும் விடுதலை அடைகிறோமோ அப்போது உங்கள் உயிர்த்தன்மை எல்லையற்றதாகி விடுகிறது ...
இந்தப் பிரபஞ்சத்தில் கலந்து கரைந்து விடப் போகிறது ..இதுதான் புத்தருக்கு நிகழ்ந்தது ...

ஓஷோ 
தம்ம பதம் 3 ...

Comments