Google

போலித்தனங்களால் யோகமே செத்துப் போய்விட்டது - OSHO




🌸போலித்தனங்களால் யோகமே 
செத்துப் போய்விட்டது...

உண்மையாக இருப்பதை யாரும் 
போலியாக்க முடியாது...

🌸ஏனென்றால், உண்மையானது 
இடைவிடா இயக்கம் கொண்டது...

அதற்குள் ஒருவர் எட்டிக் குதிக்கலாம்...

ஆனால், பயிற்சி செய்து பார்க்க முடியாது...

🌸எந்தப் பயிற்சியும் மனதால் நிகழ்வது...
மனதின் செயல்பாடு அது...

🌸மனமோ கடந்த காலத்தது...
செத்துப் போனது...

வெளியில் குதிக்க வேண்டியதெல்லாம் மனதிலிருந்துதான்...

🌸மனம் கடந்தால் பிரளயம்தான் !

அதனால், மனதின் தந்திரங்கள் பற்றிக் 
கவனமாக இருங்கள் !

🌸மமியா என்பவர், தியானம்
கற்க குருவைத் தேடிப் போனார்...

"ஒரு கை ஓசை எப்படி இருக்கும்?" என்பதில் 

கவனம் செலுத்துமாறு 
அந்தக் குரு சொன்னார்...

🌸மமியா அங்கிருந்து சென்றுவிட்டு, 

ஒரு வாரம் கழித்து திரும்பி வந்தார்...
தலையை ஆட்டியபடியே...

அவரால் முடியவில்லை...

🌸"ஓடிப்போ ! 
நீ கடுமையாக முயலவே இல்லை...

இன்னும் நீ, 
பணம், உணவு,மகிழ்ச்சி என்றுதான் 
சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்...

நீ செத்துத் தொலைவதே மேல்.

அப்புறம்தான், உனக்கு விடை கிடைக்கும் போலிருக்கிறது!" என்றார் குரு...

🌸மமியா உடனே வெளியேறிவிட்டார்...

அடுத்த வாரம் திரும்பி வந்தார்...

"ஒரு கை ஓசை எது?" என்றார் குரு...

மமியா, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, 
முனகிச் செத்தவர்போல் தரையில் விழுந்தார்...

🌸"சரி, நீ என் ஆலோசனையை 
ஏற்றுச் செத்துவிட்டாய்...

இது சரிதான்; ஆனால், அந்த ஒரு கை ஓசை விஷயம் என்ன?" என்று கேட்டார் குரு...

🌸மமியா, மெல்லக் கண் திறந்தார்;

"எனக்கு விடை கிடைக்கவில்லை!" என்றார்...

"செத்தவன் பேசமாட்டான், எழுந்து ஓடு!"
என்று விரட்டினார் குரு!!

🌿ஓஷோ🌿

Comments