Google

இயற்கை ரசிப்புத்தன்மை - Osho




இயற்கை
ரசிப்புத்தன்மை
ஓஷோ

🌸நீலவானத்தின் கீழே
சூரியனின் வெப்பம் பரவியிருந்தது...

🌸புல்லிலே தேங்கியுள்ள பனித்துளியும் கூட பனிக்கட்டியைப் போல் சில்லிட்டு இருந்தது...

🌸மலர்களிலிருந்து பனித்துளிகள்
ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டிருந்தன...

இரவு முழுக்க சுகந்தத்தை வாரியிறைத்த மனோரஞ்சிதம் உறங்கிவிட்டிருந்தது...

🌸ஒரு சேவல் கூவ...

அதனைத் தொடர்ந்து பல திக்குகளிலிருந்தும் அதற்கு பதில் கிடைத்துக் கொண்டிருந்தது...

மரங்கள் காற்றின் வேகத்தால்
அசைந்து கொண்டிருந்தன...

பறவைகளின் கீதங்கள் தடைபடாமல்
ஒலித்துக் கொண்டிருந்தன...

🌸காலை நேரத்தின் கையெழுத்து
எங்கும் பரவி இருந்தது...

"ஜகம் முழுவதுமே திடீரென
விழித்துக்கொண்டு காலைப் பொழுதை பிரகடனப்படுத்தி விடுகின்றது...

🌻எங்கோ தொலைவில்...
மரங்களின் ஊடே...

தொலைந்துவிட்ட பாதையைப்
பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன்...

🌻மெல்ல மெல்ல பாதைகளில்
பாதசாரிகள் காணப்படுகின்றனர்...
பாதைகள் நிரம்பிவிடுகின்றன...

🌻அவர்கள் நடக்கின்றனர்...
ஆனால் உறங்குபவர்களாகத்
தோன்றுகின்றனர்...

ஏதோ ஒருவகையான அகமயக்கம்...

அவர்களைப் பிடித்துக் கொண்டு
இருப்பதாகத் தெரிகிறது...

🌻காலை நேரம் மலர்ந்தும்
கூட அவர்கள் விழிப்பு பெற்றதாகத் தெரியவில்லை...

🌻ஜகத்தின் பின்னால் இருப்பவன்...

எந்தக் கணத்திலும்
வெளிப்பட்டு விடக்கூடும்...என்கிற அறிவு

அவர்களுக்கு அறவே இல்லை
என்பது போல் தெரிகிறது...

🌸வாழ்விலே எவ்வளவு சங்கீதம் உள்ளது ---
மனிதர்களோ செவிடர்களாக உள்ளனர்...

வாழ்விலே எவ்வளவு அழகு உள்ளது ---
மனிதர்களோ குருடர்களாக உள்ளனர்...

வாழ்விலே எவ்வளவு ஆனந்தம் ---
மனிதர்களோ சோர்வாக உள்ளனர்...

🌸அன்று ஒருநாள் நான்
மலையடிவாரத்திற்குச் சென்றிருந்தேன்...

அந்த அழகான மலைச்சாரலில் நாம் தங்கியிருந்தோம்...

🌸ஆனால் என்னுடன் வந்தவரோ
தினமும் நடைபெறும்...

அதே வாழ்க்கையின்
அர்த்தமற்ற பிரச்சனைகளைப்
பற்றியே பேசிக் கொண்டிருந்தார்....

🌸அவையாவுமே பயனற்றவை...

இத்தகைய பேச்சுக்களின் திரைமறைவிலே...

அந்த மலைச்சாரலின் சவுந்தரியமே!
அவருடைய கண்களுக்குத் தென்படவில்லை...

🌸இதுபோன்ற அர்த்தமற்ற விஷயங்களில் ஈடுபடுவதால் உயர்வை விட்டு
நாம் அகற்றப்பட்டு விடுகிறோம்...

அருகில் இருந்தது...
நம் கரங்களாலேயே தொலைவில்
போய் நின்றுவிடுகிறது...

🌻நான் சொல்ல விரும்புகிறேன்...

"மனிதர்களே ! நீங்கள் இழக்க வேண்டியது ஒன்றுமில்லை...

பார்வையற்றத் தன்மையைத்
தவிர...

🌻அதற்கு பதிலாக
உங்களுக்கு கிடைப்பதோ...
எல்லாமே !!

🌻உங்கள் கைகளாலேயே...
பிச்சைக்காரர்களாக ஆகிவிட்டவர்களே !

உங்கள் கண்களை திறங்கள்...

பிரபஞ்சம், சொர்க்கம்
இவற்றின் முழு அரசாட்சியே உங்களுடையது.

🌿ஓஷோ🌿
☘புரட்சி விதை

Comments