Google

பிரதிபலிப்பு - OSHO




பிரதிபலிப்பு:
அறியாமைக்கு அதற்கே உரிய ஒரு அழகு, ஒரு தூய்மை இருக்கிறது. அது ஒரு சுத்தமான கண்ணாடியைப் போன்றது. அது, தளும்பாமல் அமைதியாக இருக்கும் குளம் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும் கரையில் உள்ள மரங்களையும் பிரதிபலிப்பதைப் போல பிரதிபலிக்கும். தெரியாது என்ற அந்த நிலைதான் மனிதனின் பரிணாமவளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையாகும்.
ஒரு கண்ணாடியைப்போல மிகவும் தூய்மையாக இரு. எதுவாக இருந்தாலும் அதை வெறுமனே பிரதிபலிக்கும் கண்ணாடி போல.
நான் வெறும் விழிப்புணர்வு மட்டுமே, எதையும் பிரதிபலித்துக் காட்டும் வெறும் ஒரு கண்ணாடி, என்றார் புத்தர்.
நீ ஒரு கண்ணாடி, எதையும் பிரதிபலிப்பவன் என்பதை நினைவில் கொள்வது மட்டுமல்ல, அதை அனுபவி.
அறிவது தன்னை அறிவதுதான், அது கண்ணாடி தன்னைத் தானே பிரதிபலிப்பதைப் போல.
பிரதிபலிக்க கண்ணாடி போல எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும், அதுதான் கற்றலுக்கான நிலை.      

ஓஷோ
Osho_Tamil

Comments