Google

அன்பே சிவம்? ஓஷோ



அன்பே சிவம்?
ஓஷோ

❄ஓ சிவனே! உண்மையில் நீ என்ன?❄

🌸"தேவி, உறுதியாக...
"உருவத்தின் மீதான அன்பில்"
விழுந்திருக்க வேண்டும்...

🌸விஷயங்கள் அந்தவழியில்தான் ஆரம்பிக்கும்...

🌸அவள், சிவனை ஒரு ஆணாக நேசித்திருக்க வேண்டும்...

ஆனால், இப்போது...
அன்பு வளர்ந்த நிலையில்...

அன்பு மலர்ந்த நிலையில்...
இந்த ஆண் மறைந்துவிட்டான்.

🌸அவன் உருவமற்றவனாகிவிட்டான்...

இப்போது, அவனை எங்கேயும்
கண்டுபிடிக்க முடியாது...

"ஓ சிவனே! நீ உண்மையில் என்ன?"

🌸இந்தக் கேள்வி...
அன்பின் தீவிரமான தருணத்தில் கேட்கப்பட்ட கேள்வி...

கேள்விகள் எழும்போது...
எப்படிப்பட்ட மனநிலையிலிருந்து கேட்கப்பட்டவை என்பதைப் பொருத்து...

அவை வேறுபடுகின்றன...

🌸ஆகவே சூழ்நிலையை...
அந்தக் கேள்வி பிறந்த சமயத்தை...
உன் உள்ளத்தில் உருவாக்கிக்கொள்...

🌸தேவி,
சிவனை இழந்த தவிப்பில் இருந்திருக்க வேண்டும்...

"சிவன் அரூபமாகிவிட்டார்..."

🌸"அன்பு சிகரத்தை எட்டும்போது...
அன்பிற்கினியவர் மறைந்து போகிறார்..."

ஏன் இப்படி நடக்கிறது?

🌸ஏனென்றால்,
உண்மையாக எல்லோருமே
உருவமற்றவர்கள்தான்...

🌸நீ ஒரு உடம்பல்ல...

நீ உடம்பாக நகர்கிறாய்...
நீ உடம்பாக வாழ்கிறாய்...

ஆனால் நீ ஒரு உடம்பல்ல.

🌸ஒருவனை வெளியிலிருந்து பார்க்கும்பொழுது...

அவன் உடம்பு...

அன்பு உடம்பைத் தாண்டி உள்ளே ஊடுருவுகிறது...

🌸பிறகு அவரை நாம் வெளியிலிருந்து பார்ப்பதில்லை...

"அன்பு ஒருவரை...

அவர் எப்படி தன்னை தனக்குள் இருந்து பார்ப்பாரோ...

அதைப் போலப் பார்க்கிறது..."

அப்போது உருவம் மறைந்து போகிறது...

🌸ஒரு ஜென் துறவி...
ரின்சாய் ஞானமடைந்தார்...

உடனே அவர் கேட்ட முதல் கேள்வி,

"என் உடம்பு எங்கே?
என் உடம்பு எங்கே போயிற்று?"

என்று அவர் தேட ஆரம்பித்தார்...

🌸அவருடைய சிஷ்யர்களைக்
கூப்பிட்டுச் சொன்னார்...

"போய் என்னுடைய உடம்பு எங்கே என்று கண்டுபிடியுங்கள்..."

நான் என் உடம்பை இழந்துவிட்டேன்...

🌸அவர் அரூபத்தினுள் நுழைந்துவிட்டார்...

"நீயும் ஒரு அரூப இருப்புதான்"

🌸பிரதிபலிக்கும் கண்ணாடி
மூலமே...
உன் முகம் உனக்குத் தெரியும்.

🌸உன் கண்களை மூடி யோசி.
தியானம் செய்:

உனக்கு முகமே இல்லை...
பிரதிபலிக்கும் கண்ணாடிகளே...
உனக்கு முகத்தைக் கொடுக்கிறது...

🌸பிரதிபலிப்பு இல்லாத உலகத்தை கற்பனை செய்துபார்...

🌸நீ தனியாக ஒரு தனித்தீவில் இருக்கிறாய்...

மற்றவர்களின் கண்கள் காட்டும் பிரதிபலிப்பும் இல்லை...

🌸அப்போது உனக்கு முகம்
இருக்குமா?
உனக்கு சுத்தமாக முகமே இருக்காது...

🌸நமக்கு நம்மைப் பற்றி...
அடுத்தவர் மூலமாகவே தெரியும்...

அடுத்தவர்களுக்கு நம் வெளி உருவம் மட்டுமே தெரியும்...

🌸இதனால்தான்...
நாம் இந்த வெளித் தோற்றத்துடன்...

நம்மைச் சேர்த்து வைத்துப் பார்க்கிறோம்...

🌸தேவி சிவாவிடம் கேட்கிறாள்...

"ஓ சிவனே! நீ உண்மையில் என்ன?"

நீ யார்?

சிவனின் உருவம் மறைந்துவிட்டது...

எனவே தேவியிடம் இந்த கேள்வி.

🌸"அன்பில் நீ அடுத்தவரிடம்...
அவராகவே புகுகின்றாய்..."

நீ நீயாக புகுவதில்லை...
நீ ஒன்றிவிடுகிறாய்...

🌻"முதல் முறையாக...

நீ அடிமுடியில்லாத ஆழத்தை,
அறிகிறாய் ---
ஒரு அரூப இருப்பை.

🌻இதனால்தான் தொடரும்... பல நூற்றாண்டுகள், நூற்றாண்டுகளாக...

நாம் சிவனுக்கு, எந்த சித்திர வடிவத்தையும் கொடுக்கவில்லை...

🌻நாம் "சிவலிங்கத்தை மட்டுமே செய்து வருகிறோம்.

இது ஒரு குறியீடு மட்டுமே."

சிவலிங்கம் ஒரு அரூப வடிவமே...

🌻நீ ஒருவரை நேசிக்கும்போது...

நீ அன்பால் ஒருவருக்குள் புகும்பொழுது...

அவர் ஒரு வெறும் பிரகாசமான இருப்பாக மாறிவிடுகிறார்...

🌻சிவலிங்கம் என்பது...
ஒரு பிரகாச இருப்பு மட்டுமே...
ஒரு ஒளி வடிவம் மட்டுமே...

அதனால்தான் தேவி கேட்கிறாள்...

நீ உண்மையில் என்ன?

🌸நீ நேசிக்கும்போது...
நீ மறுபடியும் குழந்தையைப்
போலாகிறாய்...

🌸தேவி கேட்கிறாள்...

"வியப்பு நிறைந்த இந்தப் பேரண்டம் யாது?"

தேவி, திடீரென்று சொந்தக் கேள்வியிலிருந்து...

ஒரு பொதுக் கேள்விக்குத் தாவுகிறாள்...

🌸உருவம் மறையும்பொழுது...
உன் அன்பிற்கினியவர்...

பேரண்டமாக, அரூபமாக...
எல்லையற்றவராக ஆகிவிடுகிறார்...

🌸தான் சிவனைப் பற்றிக் கேட்கவில்லை...
என்பதை தேவி உணர்கிறாள்.

அவள் முழு பேரண்டத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறாள்...

🌸சிவாவே முழு பேரண்டமாக
மாறிவிட்டார்...

🌸இப்போது எல்லா நட்சத்திரங்களும்...
அவருள்ளே நகர்ந்து கொண்டிருக்கிறது...

எல்லாத் திடப் பொருள்களும்...
முழு வெளியும் அவரால் சூழப்பட்டுள்ளது...

🌸இப்போது...

தன்னகத்தே அனைத்தையும்
கொண்ட மிகப்பெரிய உண்மை அவர் ---

 "எல்லாவற்றையும் சூழ்ந்து கொண்டிருப்பவர்"

🌸'கார்ல் ஜாஸ்பர்ஸ்' கடவுளை...

"எல்லாவற்றையும் சூழ்ந்திருப்பவர்" என்று வரையறுக்கிறார்.

Comments