Google

பகவான், "நான் யார்

பகவான், "நான் யார்?"

இரு நோயாளிகள் மனநில காப்பக மைதானத்தில் சந்தித்தார்கள்.

"குட் மார்னிங் சந்துரு எப்படியிருக்கே?"

"நான் நல்லாயிருக்கேன் பாஸ்கர், ஆனால் என் பெயர் சந்துரு இல்லை."

"நானும் பாஸ்கரில்லை."

"கவலையே வேண்டாம். நாமிருவருமே இன்றைக்கு நாமாகவே இல்லை."

இதுதான் இன்றைய முழு உலகத்தில் நிலை. முழு பூமியுமே ஒரு பைத்தியக்கார விடுதி.

யாருக்குமே தான் யார் என்பது தெரியாது. தான் யார் என்பது தெரியாத மக்கள், மற்றவர்களுக்கு தங்கள் உள்ளார்ந்த தன்மையைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் கல்வெட்டுகளிலிருப்பதை, அழகான கல்வெட்டுகளிலுள்ளதை, கிளியைப்போல திருப்பிச் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் கையில் கல்வெட்டுக்களின் உண்மை தொலைந்து போகிறது.

விழிப்புணர்வு பெற்ற யாராவது ஏதாவது சொன்னால் அதில் உண்மை இருக்கிறது.

ஆனால் விழிப்படையாதவன் சொல்லும் போது அது பொய்யாகிறது.

உண்மையை அனுபவிக்காதவன் மறுபடியும் மறுபடியும் சொல்லும் போது அது பொய்யாகிறது. இரவல் வாங்கிய உண்மை, பொய்யாகிறது.

நீ யார் என்பதை உன்னால் பார்க்க முடியும்.

நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் முதல் நபர் நீயாகவே இருப்பாய்.

துரதிர்ஷ்டத்தை பார். நாம் யாரென்பதை நாம் மற்றவர்களிடம் கேட்கிறோம்.

--ஓஷோ--
The White Lotus. Ch#4

Comments