Google

முல்லா நசுரூதீன் கிராமத்துப்பக்கம் காரை ஓட்டிக் கொண்டு போனபோது



முல்லா நசுரூதீன் கிராமத்துப்பக்கம் காரை ஓட்டிக் கொண்டு போனபோது

 டெலிபோன் ரிப்பேர் செய்பவர்கள் இரண்டு பேர் கம்பத்தின் மீது ஏறிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த முல்லா, ‘ நான் இதுவரை காரே
ஓட்டியதில்லை என்று நினைத்துவிட்டார்கள் போலும்,

கம்பத்தில் ஏறிக்
கொள்கிறார்கள்.  முட்டாள்கள்

என்று திட்டிக் கொண்டே போனான்.

எப்போதும் நானே உலகத்தின் மையம் என்று நினைத்துக் கொள்ளவே உலக நடப்புகளை மனம் பயன் படுத்திக் கொள்கிறது.


“ உன்னை திரும்பவும் மசூதியில் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது முல்லா ” என்று முல்லாவிடம் கூறிய பேச்சாளர், “

 இதற்கு காரணம் என்னுடைய பேச்சுதானே ?” என்று கேட்டார்.

“ இல்லை ” என்று கூறிய முல்லா, “

 என்னுடைய மனைவியின் பேச்சே காரணம் “ என்று கூறினான். 

அன்பிலோ, ஆர்வத்திலோ மனிதன் இன்று வாழவில்லை, மாறாக பயத்தினாலும், தப்பித்தலுக்காகவும் மனிதன் வாழ்கிறான்.

ஓஷோ

Comments