Google

தொடுதல் - OSHO



தொடுதல்



தியானம் ஒவ்வொரு புலன்களையும் கூர்மையாக்கும், உனது தொடுதலைக் கூட. ஒரு தியானிப்பவனின் தொடுதலில் கதகதப்பும் அன்பும் முழுமையாக இருப்பதை நீ உணரலாம். அவர் மூலமாக ஏதோ ஒன்று பாய்வதை நீ உணரலாம். அவரிடம் சந்தோஷம் அபிரிதமாக இருப்பதை நீ காணலாம், திருப்தியை நீ பார்க்கலாம், அவரால் அதை கட்டுப்படுத்த முடியாது. அது அவரைச் சுற்றி பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.



தாமரை தண்ணீரில்தான் இருக்கிறது, ஆனால் தண்ணீரால் அதை தொட முடியாது.



ஆழமான அன்புடன் யாராவது உனது கைகளை தொடும்போது உனது கைகளும் உயிர் பெறுகின்றன.



ஒரு மலரைத் தொடும்போது இயற்கை எப்படி உள்ளதோ அப்படியே உன்னால் அனுபவப்பட முடியும்.



நம்பிக்கைகள் உனது வாழ்வைத் தொட முடியாது, ஏனெனில் நம்பிக்கைகள் வெறும் கருவிகளே.



பாதத்தின் கீழே உள்ள தொடுஉணர்ச்சியின் மூலமாக பாதையை உணர்ந்து பார்.

Comments