இயற்கை ரசிப்புத்தன்மை - Osho
இயற்கை
ரசிப்புத்தன்மை
ஓஷோ
🌸நீலவானத்தின் கீழே
சூரியனின் வெப்பம் பரவியிருந்தது...
🌸புல்லிலே தேங்கியுள்ள பனித்துளியும் கூட பனிக்கட்டியைப் போல் சில்லிட்டு இருந்தது...
🌸மலர்களிலிருந்து பனித்துளிகள்
ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டிருந்தன...
இரவு முழுக்க சுகந்தத்தை வாரியிறைத்த மனோரஞ்சிதம் உறங்கிவிட்டிருந்தது...
🌸ஒரு சேவல் கூவ...
அதனைத் தொடர்ந்து பல திக்குகளிலிருந்தும் அதற்கு பதில் கிடைத்துக் கொண்டிருந்தது...
மரங்கள் காற்றின் வேகத்தால்
அசைந்து கொண்டிருந்தன...
பறவைகளின் கீதங்கள் தடைபடாமல்
ஒலித்துக் கொண்டிருந்தன...
🌸காலை நேரத்தின் கையெழுத்து
எங்கும் பரவி இருந்தது...
"ஜகம் முழுவதுமே திடீரென
விழித்துக்கொண்டு காலைப் பொழுதை பிரகடனப்படுத்தி விடுகின்றது...
🌻எங்கோ தொலைவில்...
மரங்களின் ஊடே...
தொலைந்துவிட்ட பாதையைப்
பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன்...
🌻மெல்ல மெல்ல பாதைகளில்
பாதசாரிகள் காணப்படுகின்றனர்...
பாதைகள் நிரம்பிவிடுகின்றன...
🌻அவர்கள் நடக்கின்றனர்...
ஆனால் உறங்குபவர்களாகத்
தோன்றுகின்றனர்...
ஏதோ ஒருவகையான அகமயக்கம்...
அவர்களைப் பிடித்துக் கொண்டு
இருப்பதாகத் தெரிகிறது...
🌻காலை நேரம் மலர்ந்தும்
கூட அவர்கள் விழிப்பு பெற்றதாகத் தெரியவில்லை...
🌻ஜகத்தின் பின்னால் இருப்பவன்...
எந்தக் கணத்திலும்
வெளிப்பட்டு விடக்கூடும்...என்கிற அறிவு
அவர்களுக்கு அறவே இல்லை
என்பது போல் தெரிகிறது...
🌸வாழ்விலே எவ்வளவு சங்கீதம் உள்ளது ---
மனிதர்களோ செவிடர்களாக உள்ளனர்...
வாழ்விலே எவ்வளவு அழகு உள்ளது ---
மனிதர்களோ குருடர்களாக உள்ளனர்...
வாழ்விலே எவ்வளவு ஆனந்தம் ---
மனிதர்களோ சோர்வாக உள்ளனர்...
🌸அன்று ஒருநாள் நான்
மலையடிவாரத்திற்குச் சென்றிருந்தேன்...
அந்த அழகான மலைச்சாரலில் நாம் தங்கியிருந்தோம்...
🌸ஆனால் என்னுடன் வந்தவரோ
தினமும் நடைபெறும்...
அதே வாழ்க்கையின்
அர்த்தமற்ற பிரச்சனைகளைப்
பற்றியே பேசிக் கொண்டிருந்தார்....
🌸அவையாவுமே பயனற்றவை...
இத்தகைய பேச்சுக்களின் திரைமறைவிலே...
அந்த மலைச்சாரலின் சவுந்தரியமே!
அவருடைய கண்களுக்குத் தென்படவில்லை...
🌸இதுபோன்ற அர்த்தமற்ற விஷயங்களில் ஈடுபடுவதால் உயர்வை விட்டு
நாம் அகற்றப்பட்டு விடுகிறோம்...
அருகில் இருந்தது...
நம் கரங்களாலேயே தொலைவில்
போய் நின்றுவிடுகிறது...
🌻நான் சொல்ல விரும்புகிறேன்...
"மனிதர்களே ! நீங்கள் இழக்க வேண்டியது ஒன்றுமில்லை...
பார்வையற்றத் தன்மையைத்
தவிர...
🌻அதற்கு பதிலாக
உங்களுக்கு கிடைப்பதோ...
எல்லாமே !!
🌻உங்கள் கைகளாலேயே...
பிச்சைக்காரர்களாக ஆகிவிட்டவர்களே !
உங்கள் கண்களை திறங்கள்...
பிரபஞ்சம், சொர்க்கம்
இவற்றின் முழு அரசாட்சியே உங்களுடையது.
🌿ஓஷோ🌿
☘புரட்சி விதை
Comments
Post a Comment